Friday 24 June 2016

படித்ததில் பிடித்தது....

ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:
என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன் கழித்த நாட்களே என்று". இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் , யாரும் எதுவும் பேசவில்லை.
பேச்சாளர் தொடர்ந்தார்.. அந்த இன்னொருவருடைய மனைவி, "என் தாய் தான்" என்றார். ;) :D
கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது.
இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி, வியப்பில் ஆழ்த்த நினைத்தார்.




வீட்டிற்கு சென்ற அவர், இரவு உணவு உண்ட பின், தன் மனைவியை நோக்கி," என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே" என்று கூறிவிட்டு அடுத்த வாக்கியத்தை கூற முற்படுகிறார்.
கண் விழித்து பார்த்த போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவர் மனைவி வீசி எறிந்த கொதித்த வெந்நீர் பட்ட கொப்புளங்களுடன்.

நீதி :அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம ஏதாச்சும் பண்ணிணா இப்படி தான்!

Wednesday 22 June 2016

கும்பகோணத்தை கலக்கும் பெண் பைக் மெக்கானிக்



இந்த சகோதரியின் பெயர் ரோகிணி. கும்பகோணத்தை சேர்ந்த இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத இவர் பைக் மெக்கானிக்காக பணிபுரிகிறார். scooty முதல் Bullet வரை எதுவாக இருந்தாலும் பிரித்து மேய்கிறார். இவருக்கு நம் வாழ்த்துக்களை சொல்லுவோம்  

எனக்கே விபூதி அடிக்க பாத்தே ல !!!!


ஒரு குட்டி கதை:-

ஏர்டெல் நிறுவனர்
இறைவனை நோக்கி கடும் தவம்
புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர்
முன்
தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10
முறையும் நீ
நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில்
முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல்
நிறுவனர்,
'அந்தபட்டம் தன் கைக்கு வர
வேண்டும்,
அந்தபெண்
வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற
சிறு சிறு விசயங்களை சோதித்து 6
வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது, 7வது வரமாக
தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர்
சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் வோடபோன்
நிறுவனர்
ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3
வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.
அவற்றை பயன்படுத்த தான்
உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல்
வரமாக
"எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட
போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர், "10
வாய்ப்புகள்
தருவதாக சொல்லி
7 வாய்ப்புகள் தான்
தந்தாய்,
8வது வாய்ப்பை பயன்படுத்தியும்
பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ
ஒரு ஏமாற்றுக்காரன்" என்றார்.
-
-
















கடவுள் பொறுமையாக,
"நீ மட்டும் 10
ரூபாய்க்கு கார்டு போட்டா 7
ரூபாய்க்கு தான பேச விடுற?
அது மாதிரி தான்
இதுவும்,
3 வரம்
சர்விஸ்சார்ஜ்.
யாரங்கே��������
இவனை நரகத்தில் தள்ளுங்கள்"
என்றார்.....

Tuesday 21 June 2016

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உலக சாதனை

வரலாற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒரு தடம் பதித்துள்ளது.. இன்று சரியாக இந்திய நேரம் 09:26 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, 20 செயற்கைக் கோள்களை ஏந்திய PSLV C34 என்ற விண்கலன் விண்ணை நோக்கி வெற்றிகரமாக  ஏவப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி வெற்றிகரமான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது.
PSLV C34ன் வெற்றிக்கு இந்திய பிரதமர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி கொண்டாடினர். PSLV C34 விண்கலம், விண்வெளியில் 10 மடங்கு குறைந்த செல்வில் 20 செயற்கை கோள்களை செலுத்தப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இரண்டு மாணவ செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட உள்ளன. சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் ஒரு செயற்கைக் கோளும், புனே பொறியியல் கல்லூரியின் செயற்கைக் கோளும்தான் அவை. நம் ஏவுகணையில் வெறும் 1 கிலோ எடையுள்ள SWAYAM எனும் இந்திய செயற்கைக் கோளும் பயணிக்கிறது.

1. Cartostat-2 தொடர் விண்கலம் (Cartostat-2 series satellite)(இந்தியா):
இதுதான் இந்த ஏவுகணையில் முதன்மையான செயற்கைக் கோளாகும். பயன்பாடு: வரைபட பயன்பாடு, கடலோர நிலக் கட்டுப்பாடு, சாலை நெட்வொர்க்கிங், நீர் விநியோகம், புவியியல் தகவல் முறைமை பயன்பாடுகள்.
இதன் எடை 727.5 கிலோவாகும். ஏவுகணையிலேயே அதிக எடையுள்ள செயற்கைக் கோள் இதுதான்.

2. LAPAN-A3(இந்தோனேசியா):
இது பூமியைக் கண்காணிக்கும் மைக்ரோ செயற்கைக் கோள்.
இந்த செயற்கைக்கோளின்ண்கா முக்கியமான பயன்பாடு கண்காணிப்பு, நிலப் பயன்பாடு, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு.
இதன் எடை 120 கிலோ.
3. M3MSAT (கனடா):
குறைந்த புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து வரும் சமிஞைகளை சேகரித்து ஆய்வு செயதலே, 85 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளின் முதன்மையான நோக்கம்.

4. GHGSAT- D (கனடா):

25.5 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளின் தலையாய நோக்கம் பூமியில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் செறிவைக் கண்டறிதலே.

5. BIROS (ஜெர்மனி):
உயர்வெப்ப நிகழ்வுகளின் தொலை உணர்வை (Remote Sensing of High temperature events) அறிவதற்கே இந்த செயற்கைக் கோள் ஏவப்படுகிறது. இதன் எடை 130 கிலோ.

இந்தியா-US நட்புறவைக் குறிப்பதற்காக ISRO, Americaவின் 13 சிறிய செயற்கைக் கோள்களைத் தாங்கிச் செல்லும். இதில் கூகுளிற்குச் சொந்தமான Tera Bella நிறுவனத்தின் "Earth Imaging Satellite" அடங்கும். 110 கிலோ எடையுள்ள SkySat Gen-2 என்ற இந்த கோளின் இரு முக்கிய அம்சங்கள்:
√sub-meter resolution images
√ high definition video

மேலும், இரண்டு மாணவ செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட உள்ளன. சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் ஒரு செயற்கைக் கோளும், புனே பொறியியல் கல்லூரியின் செயற்கைக் கோளும்தான் அவை. நம் ஏவுகணையில் வெறும் 1 கிலோ எடையுள்ள SWAYAM எனும் இந்திய செயற்கைக் கோளும் பயணிக்கிறது
20 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 1,288 கிலோ. 26 நிமிடத்தில் 20 செயற்கைக் கோள்கள் விண்ணில் புகுத்தப்படும். இதைக் குறித்து ISRO chairman கூறுவதாவது, "20 செயற்கைக்கோள்கள் பறவைகள் போல விண்வெளியில் பறக்கும்! ஒவ்வொன்றும் விண்ணில் செல்லுத்தப்பட்டதும், ஒன்றோடு ஒன்று சாராமல் தங்களது பாதையில் இலக்கை நோக்கி செயல்பட துவங்கும்.

ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதும் 26 நிமிடங்களில் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நினைத்த பாதையில் சுழலும்.16வது நிமிடத்தில் முதல் கோள் புகுத்தப்படும்; அடுத்த 10 நிமிடங்களில் மற்ற 19 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படும்.

ஒரே ஏவுகணையில் அதிக செயற்கைகோளைச் செலுத்தும், இந்தியாவின் மிகப் பெரிய முயற்சி இது. ஏப்ரல் 28, 2008ல், உலகிலேயே அதிக அளவு செயற்கைக் கோள்களை (10 செயற்கைக்கோள்கள்) ஒரே ஏவுகணையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது ISRO. 2013ல், America Minotaur-1 என்ற விண்கலம் 29 செயற்கைக் கோள்களை ஒரே ஏவுகமையில் செலுத்தி நம் சாதனையை முறியடித்தது. மீண்டும், 2014ல் ரஷ்யா 37 செயற்கைக்கோளை ஒரே ஏவுகணையில் செலுத்தி சாதனை படைத்தது. தற்போது, இந்தியா குறைந்த செலவில் அதிக செயற்கைக் கோளகளை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கவுள்ளது.

ISROவின் இந்த புதிய முயற்சி Jeff Bezos மற்றும் Elon Musk ஆகிய பில்லினியர்களின் விண்கல நிறுவனத்திற்கு சவால் விடுவதாக உள்ளது. மொபைல் நிறுவனங்கள், இணைய சேவை மையங்கள் எனப் பல பேரின் தேவையைப் பூர்த்தி செய்ய, முழுக்க முழுக்க அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த இந்த துறை தனியார்மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் குறைந்த செலவில் தங்கள் ஏவுகணைகளை விடுவதால்தான். இந்நிலைக்கு ஒரு சவால் விடுகிறது நம் நாட்டு விஞ்ஞானிகளின் செயல்!

First Love

ஒரு பெண் இரவு 12 மணியளவில் தன் காதலனை அவசரமாக பார்க்கவேண்டும் என்றழைக்கிறாள். பதறிப்போன காதலன் வேகமாக வருவகையில் அவனை பார்த்தவுடன் ஓடிவந்து கட்டியனைத்து அழுகிறாள். என்னாச்சு!!! ஏன் அழுகிறாய்!!! என்று கேட்க. நம் காதல் என் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. விடிந்தால் எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன்! நாம் எங்காவது ஓடிவிடலாம் என்று சத்தமாக அழுகிறாள். 
காதலனோ வறுமையில் பிறந்தவன். நன்றாக யோசித்து பெண் வீட்டில் முறைபடி பெண் கேட்பதுதான் சரி என்று அவளை அழைத்துகொண்டு சினிமா ஹிரோ போல அவள் வீட்டிற்கே சென்றுவிட்டான். இவள் அழுதுகொண்டு வருவதை பார்த்தவர்கள். தங்கள் வீட்டுப் பெண்ணை இவன்தான் ஏதோ செய்திருக்கிறான் என்று தவறாக நினைத்த அவளின் சகோதரன் காதலனை சரமாரியாக தாக்குகிறான். 
முகமெல்லாம் இரத்தம் சொட்ட காதலனை பார்த்தவள் "அய்யயோ" அடிக்காதீர்கள்"! நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை! எங்களை வாழவிடுங்கள் அவன் பாவம்... ஆஆஆ... அம்மா" அய்யயோ"!!! என்று அலறுகிறாள். இவள் அழுகுரல் யார் காதிலும் விளவில்லை. அடி பயங்கரமாக விழ காதலனின் ஒரு காலை அடித்தே உடைத்துவிடுகின்றனர். வேகமாக வீட்டிற்குள் ஓடி ஒரு கத்தியை எடுத்துவந்து அடேய்" இன்னொரு அடி அவன் மீது விழுந்தால் இங்கேயே நான் கழுத்தை அருத்துக்கொள்வேன் என்கிறாள். 

என்னை மறந்துவிடுடா! நீ எனக்கு வேண்டாம்! போடா... ஆஆஆ... என்று மனநொந்து மண்டியிட்டு அழுகிறாள். மெதுவாக நகர்ந்துவந்த காதலன் சொல்கிறான் நீ அழாதேமா இப்போதுதான் எனக்கு வலிக்கிறது என்று மயங்கிபோனான். அழுது அழுது காதலியும் அவன் மீது மயங்கிவிடுகிறாள். (தன்னுடைய முதல் காதல். அதாவது இவ்வளவு கதையையும் தன் மனைவியிடம் சொல்லி அழுகிறான் அந்த காதலன்.) 
கண் கசிந்தபடி பிறகு என்னாச்சு!!! என்கிறாள் அவனது மனைவி. என் மேல் போலீஸ் புகார் கொடுத்து ஒரு வருடம் சிறையில் இருந்தேன். சிறையிலிருந்து வந்த நான் என் நன்பனை பார்க்க சென்றேன். அப்போதுதான் தெரிந்தது என் நன்பனின் மனைவிதான் என் முதல் காதலி என்று... அதற்கு மேல் அவனால் சொல்லமுடியாமல் வானத்தை பார்த்து ஆஆஆஆ... என்று அலறுகிறான். 
இப்போதுதான் அவன் மனைவிக்கு கனவன் மீது காதல் வந்தது. அவன் சட்டையை பிடித்து இழுத்து மார்போடு அனைத்துகொண்டு "அவள் போனாள் போகட்டுமே!!! உங்களுக்காக நான் இருக்கிறேனே! உங்கள் மனதில் இவ்வளவு வலி இருக்கிறதே... அய்யோ" எப்படி தாங்கிகொண்டீர்கள்... நான் உங்கள் மனைவி. உங்களுக்காக பிறந்தவள். இனி நான் உங்களை விட்டு ஒரு நொடி கூட பிரியமாட்டேன். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம்! செத்தால் ஒன்றாக சாவோம்! என்று அவன் முகத்தில் முத்தமழையாய் பொழிகிறாள். 
என் மனைவி என்னை புரிந்துகொண்டாள் இதுவே போதுமடி என்று அவளை தூக்கி அடியே ராச்சஷி....பொண்டாட்டி.. என்று சத்தமாக சிரித்துக்கொண்டே அழுகிறான். (
(எப்படி காதலிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறது அந்த முதல் காதல். நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்...

Dear குடிகாரன் s friends

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.என்றார்.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...''என்று கத்திக் கொண்டிருந்தார்.
உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.
உடனே ஞானி, இதிலிருந்து என்னை எப்படியாவது என்னை விடுவித்து விடு என்றார்.
அதற்கு குடிகாரன், இவரென்ன முட்டாளா என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.
உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.
இது போல நாமும், கோபம், பொறாமை, சுயநலம், பழிவாங்கும் எண்ணம் எனும் தூண்களை இறுகப் பிடித்து வைத்திருக்கிறோம். விடுவதும், கட்டிப்பிடித்துக் கொள்வதும்.. அவரவர் கையில்.

யாருப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறது...


எங்கேயோ கேட்ட ஜோக்

சர்தார்ஜி: “இந்த சின்ன டி.வியை வாங்கலாம்னு இருக்கேன். என்ன விலை?”
கடைக்காரர்: “சர்தார்ஜிக்கு நாங்க விக்கிறதில்லை”
அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய சர்தார்ஜி, தன் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு மறுபடி கடைக்குப் போய


சர்தார்ஜி: இந்த சின்ன டி.வி வேணும். என்ன விலை?” என்றார். கடைக்காரர் மறுபடி அதே பதில் சொல்ல , 
மீண்டும் வீட்டுக்கு வந்தார் சர்தார்ஜி. தாடியை எடுத்துவிட்டு, வேறு ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்டு, வேறு உடையில் மீண்டும் அதே கடைக்குப் போய் அதையே கேட்டார்.
கடைக்காரரிடம் இந்த முறையும் அதே பதில்.
சர்தார்ஜி: “அதெப்படி ஒவ்வொரு முறையும் நான் சர்தார்னு கண்டுபிடிச்சீங்க?” அப்பாவியாகக் கேட்டார் சர்தார்ஜி.
கடைக்காரர்: “ஏன்னா இது டி.வி இல்லை. மைக்ரோவேவ் “

ஒரு லோன் வேணும்... ஹி ஹி ஹி...

Bank Manager: வாங்க தம்பி என்ன வேணும் உங்களுக்கு 
நாம்: ம்ம்ம்ம் லோன் வேணும் சார் 
Bank Manager: அப்படியா நீங்க எங்க வொர்க் பண்றிங்க 
நாம்: face book ல சார் 




Bank Manager: அடேயப்பா அது பெரிய கம்பெனி ஆச்சே வெரி குட்
நாம்: ஆமா சார் 
Bank Manager: உங்க ஆபிசு எங்க இருக்கு தம்பி 
நாம்: வீட்டுலதான் சார். 
Bank Manager: அப்பிடியா சரி அங்க நீங்க என்ன வொர்க் பண்றிங்க 
நாம்: போஸ்ட் போடறேன் சார் 
Bank Manager: என்ன நீங்க போஸ்ட் மேனா 
நாம்: இல்ல சார் நான் அங்க கட்டுரை அப்புறம் போட்டோ இத எல்லாம் பண்றேன் சார்.
Bank Manager: அப்போ நீங்க face book ல ரைட்டர்னு சொல்லுங்க 
நாம்: ரைட்டு சார்.
Bank Manager: உங்க வொர்க்கின் அவர்ஸ் எப்பிடி
நாம்: 24 அவர்ஸ் சார்.
Bank Manager: லீவு உண்டா.
நாம்: இல்ல சார் . வேணுன எடுத்துக்கிடலாம் . நான் லீவே எடுத்தது இல்ல சார் 
Bank Manager: வெரி குட் .ஆமா உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் 
நாம்: ஒரு நாளைக்கு எல்லாம் சேர்த்தா ஒரு மூணாயிரம் கிடைக்கும் சார்.
Bank Manager: அவ்வளவு பணமா 
நாம்: பணம் இல்ல சார் . likes 
Bank Manager: likes ஆ .அப்போ face book ல சம்பளம் கொடுக்க மாட்டாங்களா 
நாம்: அதுக்காகத்தான் சார் லோன் கேட்டு வந்திருக்கேன்.
Bank Manager: சம்பளம் கொடுக்க மாட்டாங்களா அப்போ நீ வேல வெட்டி இல்லாதவனா 
நாம்:அப்படியும் வச்சுக்கலாம் சார் 
Bank Manager: அடி செருப்பால .யார்ட அங்க இந்த நாய புடிச்சு நம்ம நாய்கிட்ட விடுங்கடா நீ வீட்டுலதான் அபீசுனு சொன்ன அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும்
நான்:ESCAPE....

Reserve Bank Governor Raghuram Rajan gives respect to a security guard



"My name is Raghuram Rajan, I do what i do" in reply to speculation that he was reducing interest rates on pressure from Modi govt..
Rajan's Top Quote 1/10..
The next few days...i would post Rajan's top 10 quotes..especially the ones mocking the Modi govt 

8 Habits of Incredibly Interesting People

Interesting people have a special magnetism. They tell incredible stories and lead unusual lives. But what exactly makes them so captivating?
They’re curious more than anything else. An interesting person is always excited to explore the world, and this energy radiates outward.
Some people are naturally interesting, but there are also ways to learn to be more engaging. Dr. Clair Nixon is known throughout Texas A&M as an incredibly interesting accounting professor (an oxymoron if there ever was one). Accounting is a difficult subject to make interesting and fun, which is what makes Dr. Nixon so special. He’s so good at making things interesting that he doesn’t just teach accounting, he also gives lectures on how to be more interesting.
Indeed, anyone can learn to become more interesting, which is a wonderful thing, because being interesting can help you strengthen your network, win more clients and lead more effectively.
There are several habits that many interesting people have in common. Sometimes these habits form naturally, but they are more often than not the result of conscious effort. Here’s what interesting people do to make themselves engaging, unusual and hypnotizing.

1. They are passionate 

Jane Goodall, a bona fide interesting person, left her home in England and moved to Tanzania at age 26 to begin studying chimpanzees. It became her life’s work, and Goodall has devoted herself fully to her cause while inspiring many others to do the same. Interesting people don’t just have interests; they have passions, and they devote themselves completely to them.

2. They try new things 

Interesting people do what interests them. They know what they want, and they’re brave enough to take the steps to get there. This often means trying new things -- things at which they’re often terrible at first. The very act of seeking new experiences also happens to be great for your mood, and people who are happy are magnetic and far more interesting to be around than downers.

3. They don’t hide their quirks 

Interesting people often have unusual preferences that don’t fit the norm. They’re open and unabashed about who they are, which gives everyone a good look at these interesting tendencies. Billionaire Warren Buffett, for example, has never been suited to the high-rolling lifestyle. Instead, he still lives in the same modest house he bought in 1958 for $31,500. It might seem quirky -- or even strange -- for such an incredibly wealthy man to live so frugally, but Buffett doesn’t sacrifice his preferences because of what’s expected of him.

4. They avoid the bandwagon

Nothing is more boring than following the bandwagon, and interesting people are intent on forging their own paths. There’s often nothing wrong with what everyone else is doing; it’s just that interesting people are innovators, who break conformity to pursue new, exciting, and yes, interesting ideas.

5. They check their egos at the door

An egomaniac is never interesting. Egomaniacs are always posturing, always worrying about how they’ll come across. It’s exhausting and it’s also dishonest. Take Oprah Winfrey -- an interesting  and interested person. In a speech to the Stanford University graduating class of 2008, she said, “The trick is to learn to check your ego at the door and start checking your gut instead. Every right decision I’ve made -- every right decision I've ever made -- has come from my gut. And every wrong decision I’ve ever made was a result of me not listening to the greater voice of myself.” Oprah’s advice is so important: listen to your values, goals and ambitions, rather than worrying about what will make you look good.

6. They’re always learning

To interesting people, the world has infinite possibilities. This curiosity about the unknown leads to constant learning, fueled by an ever-burning desire to discover the unknown. Despite his intelligence and accomplishments, Albert Einstein kept a sense of wonder throughout his life that made him continue to ask questions about the world. Like Einstein, interesting people are in a constant state of wonder.

7. They share what they discover

The only thing interesting people enjoy as much as learning is sharing their discoveries with others. While some will spin engaging yarns about their exciting travels, there’s more to it than that. Interesting people are interesting because they feel out their conversational partner to see what sparks that person’s interest. They don’t share to expose all of the interesting things they’ve done; they share for other people to enjoy.

8. They don’t worry about what others think of them

Nothing is more uninteresting than someone who holds their true self back because they’re afraid that other people might not like it. Instead, interesting people are true to themselves wherever they are, whoever they’re with and in whatever they’re doing. Interesting people are authentic to a fault. The famous English author Charles Dickens personified this. No matter where he was working -- in a friend’s house or in a hotel -- he would bring specific pens and objects and arrange them precisely. While his behavior may have seemed strange, he was always true to himself.

Bringing It All Together

It might not always be easy to incorporate these habits into daily life, but that’s what makes the people who do so interesting—they go against the grain, and that’s undeniably interesting. While I know that you’re already interesting, never forget to keep exploring the world and staying true to yourself.

படித்ததில் பிடித்தது....


🇮🇳 பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை..
.
மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார். அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?' என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினா
ர். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,'' என்றார்.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந
்தான்.
மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்.'' என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.
ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர்.
கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.
மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.
""அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர்.
இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்
போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப் போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!'' என்றார்.
தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்...
.
நீதி: பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை...
.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🇮🇳👍🏼

யானையைப் பற்றி இந்த விஷயம் எத்தனைபேருக்கு தெரியும்

யா
னைகளின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது... தரையில் கிடக்கும் உடைந்த கண்ணாடி துண்டுகள் அதன் மொத்த எடையுடன் அதன் மீது வைத்தால் நன்றாக உள்ளே நுழையும்,அதன் பின்னால் அவைகளால் நடக்க முடியாது...
இரண்டு நாட்களில் சீழ் பிடிக்கும், புழுக்கள் சதையை துளைக்கும், நாள் ஒன்றுக்கு 30 லிட்டர் நீர் பருகி, 200 கிலோ உணவு உண்டு, 50 கிமி நடந்து வாழ வேண்டிய உயிர் இப்படி 5 நாட்கள் நின்றால் வேகமாக உடலிழைத்து துதிக்கையை ஊன்றி, உடல் நடுங்கி உயிரிழக்கும்...
உல்லாசமாக காடுகளுக்கு சென்று மது அருந்திவிட்டு உடைத்துப்போடும் ஒரு பீர் பாட்டில் அந்த காட்டையே நம்பி வாழும் இறைவனின் படைப்பான ஒரு யானையின் உயிரையே காவு வாங்கும்.
நீங்கள் குடித்து விட்டு தூக்கி எரியும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் விளைவுகள் அதிகம் .

Thursday 16 June 2016

This is how India is?


Current situation of Makkal Nala Kootani


Truth of life-2


Truth of life


Innovative way of growing plants


Modern day slavery


Pondicherry beach harbour


Say hi! to this chirp


Greatest threat of our generation


Kids can show us a different perspective


Tamilnadu Chief minister J.Jayalalitha in her younger days


All great minds in a single picture


Corn vendor at thiruvanmiyur beach


A beach soanpapdi seller


Budding flower


Kids can teach us manythings in life


Kabali Songs on the way

It has been announced that Kabali audio will be premiered in youtube